Connect with us

Raj News Tamil

முதன்முறையாக இந்த தவறை செய்த பா.ரஞ்சித்!

சினிமா

முதன்முறையாக இந்த தவறை செய்த பா.ரஞ்சித்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை ஆகிய பல்வேறு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக தவறு ஒன்றை செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சொன்ன பட்ஜெட்டில் மட்டுமே படத்தை எடுத்து முடிக்க கூடியவர் தான் பா.ரஞ்சித். தங்கலான் படத்தை பொறுத்தவரை, சொன்னதை விட அதிகமான தொகையை அவர் செலவு செய்துவிட்டாராம்.

இதனால், படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் வரை சென்றுவிட்டதாம். ஆனால், செலவு செய்ததற்கு ஏற்றதுபோல், ஹாலிவுட் லெவலுக்கு படத்தை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது..

More in சினிமா

To Top