Connect with us

Raj News Tamil

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த 4 மாத குழந்தையை கடித்த நாய்!

இந்தியா

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த 4 மாத குழந்தையை கடித்த நாய்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மாதத்தில் குழந்தை ஒன்று இருந்தது. வேலை வேலை செய்யும் இவர்கள் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று தொட்டிலில் குழந்தையை தூங்கவைத்து விட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது தெரு நாய் ஒன்று குடிசையின் உள்ளே சென்று குழந்தையின் முகம் மற்றும் நெற்றியில் கடித்துள்ளது. அதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நான்கு மாத குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top