Connect with us

Raj News Tamil

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து!

தமிழகம்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து!

திருப்பூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, திருப்பூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று பயணம் செய்தது. சரவணன் என்பவர் இயக்கி வந்த இந்த பேருந்தில், இரண்டு குழந்தைகள் உட்பட, 57 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், திருப்பூர் புதுரோடு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, விபத்து ஏற்பட்டது.

ஆனால், இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பயணிகளை மீட்டு, வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top