Connect with us

Raj News Tamil

“லவ் பண்றியா? இல்லையா” – சிறைகாவலரின் மகளிடம் அத்துமீறிய இளைஞர்! இறுதியில் நடந்த கொடூரம்..! 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழகம்

“லவ் பண்றியா? இல்லையா” – சிறைகாவலரின் மகளிடம் அத்துமீறிய இளைஞர்! இறுதியில் நடந்த கொடூரம்..! 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால், சிறையில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இவருக்கு, ரமா என்ற மனைவியும், ப்ளஸ் ஒண் படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில், திருமாலின் மகள் பள்ளிக்கு செல்லும்போது, சந்தோஷ் என்ற இளைஞர், கேலி கிண்டல் செய்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, சந்தோஷை சந்தித்த திருமால், அவரை கண்டித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய அவர், சந்தோஷ்-க்கு சொந்தமான இனிப்பு கடையையும், அடித்து நொறுக்கியுள்ளார்.

இதனால் கடும் கோபம் அடைந்த சந்தோஷ், தனது உறவினர்கள் 20 பேருடன், திருமாலின் வீட்டிற்கு சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த 7 பேரும், அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருமாலின் குடும்பத்தினரும், பொதுமக்கள் சிலரும், தங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி திருநாவுக்கரசு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top