Connect with us

Raj News Tamil

சென்னை எழும்பூரில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து..!

தமிழகம்

சென்னை எழும்பூரில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு ரயில் பணிமைனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரயில் என்ஜின் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

அப்போது திடீரென ரயில் என்ஜின் தடம்புரண்டது. தண்டவாளத்தில் இருந்து 3 சக்கரங்கள் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள் ரயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top