தமிழகம்
ஏரியில் கை கழுவ சென்ற 2 குழந்தைகள் பலி! கதறி அழுத பெற்றோர்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயம் செய்து வரும் இவருக்கு, 9 வயதில் விஜய் என்ற மகனும், 8 வயதில் பூமிகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், விஜயும், பூமிகாவும், நேற்று முன்தினம் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த தனது தந்தையை பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது, இயற்கை உபாதைக்கு சென்ற இருவரும், தங்களது கைகளை, அருகில் இருந்து ஏரிக்கு சென்று கழுவியுள்ளனர்.
ஆனால், அந்த சமயத்தில் விஜயின் கால்கள் தவறி, அவர் ஏரியின் உள்ளே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூமிகா, தனது அண்ணனை காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார். இறுதியில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment Login