இந்தியா
முடிவுக்கு வந்த விழிஞ்சம் துறைமுக போராட்டம்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை மூடக்கோரி சுமார் 130-நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு பிரச்சனைகளை முன்நிறுத்தி நடந்த இப்போராட்டம், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய லத்தீன் திருச்சபை புயலில் வீடுகள் இடிந்தவர்களுக்கும், மேலும் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நாட்களுக்கு அரசே இழப்பீடு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளதால் கைவிடப்பட்டதாக போரட்டக்குழுவினர் தெரிவித்தனர். கேரள அரசு எடுத்த நடவடிக்கைகள் அல்லது உறுதிமொழிகள் திருப்தி அடந்ததால் அல்ல, தேவைப்பட்டால் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
You must be logged in to post a comment Login