இந்தியா
பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் : மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு..!
பிரதமர் மோடி வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் வருகிறார். தொடர்ந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனால் கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என திருவனந்தபுரம் பாஜக மாநில தலைவருக்கு வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மத்திய மற்றும் கேரள உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பாஜ மாநில அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதில் மிரட்டல் விடுத்த அமைப்பின் பெயர், விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிகிறது.
அந்த கடிதத்தை பாஜக தலைவர் சுரேந்திரன், கேரள டிஜிபி அனில்காந்திடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக ஒரு புகாரும் கொடுத்தார். இதையடுத்து கேரள டிஜிபி அனில்காந்த் போலீஸ் உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
You must be logged in to post a comment Login