Connect with us

Raj News Tamil

நேருக்கு நேர் மோதிக்கொண்ட சரக்கு ரயில்….வெளியான அதிர்ச்சி காரணம்

இந்தியா

நேருக்கு நேர் மோதிக்கொண்ட சரக்கு ரயில்….வெளியான அதிர்ச்சி காரணம்

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு ரெயிலில் இருந்த ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரெயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து காரணமாக காரக்பூர் – பாங்குரா – ஆட்ரா வழித்தடத்தில் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

சிவப்பு சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதே ரயில் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் சென்றதால் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில் மீது மோதி விபத்து நடந்தாக தென்கிழக்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top