Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கணவன் தூங்கி கொண்டிருந்த போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!!

தமிழகம்

கணவன் தூங்கி கொண்டிருந்த போது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!!

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் அய்யம்மாள் என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

மாதவன் குடி போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி அய்யம்மாள் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர் மாதவன் குடி போதையில் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த மனைவி அய்யம்மாள், தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாதவன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top