Connect with us

Raj News Tamil

“என் தலைய வெட்டினாலும் இது நடக்காது” – ஆவேசம் அடைந்த மம்தா பானர்ஜி!

இந்தியா

“என் தலைய வெட்டினாலும் இது நடக்காது” – ஆவேசம் அடைந்த மம்தா பானர்ஜி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படிக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று, மேற்கு வங்க மாநிலத்தில் போரட்டம் நடத்தி வருகிறது.

ஆனால், தன்னால் அகவிலைப்படியை உயர்த்தி தரமுடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திட்டவட்டமாக கூறி வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி, உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஏற்கனவே 100 சதவீதத்திற்கு மேல் அகவிலைப்படி வழங்கி வருகிறோம். இதற்கு மேல் வழங்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தன்னுடைய இந்த செயல் பிடிக்கவில்லை என்றால், தனது தலையை துண்டித்துக் கொள்ளலாம் என்று ஆவேசமாக கூறிய அவர், வானத்தில் இருந்து பணம் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top