Connect with us

Raj News Tamil

திருமணமாகி 3 நாட்கள்.. விருந்து கூட சாப்பிட்டாங்க.. ஆனா.. இளம்பெண் விபரீத முடிவு..

தமிழகம்

திருமணமாகி 3 நாட்கள்.. விருந்து கூட சாப்பிட்டாங்க.. ஆனா.. இளம்பெண் விபரீத முடிவு..

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். 31 வயதாகும் இவருக்கும், ரெஸ்பாகா என்ற 25 வயது பெண்ணுக்கும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மறுவீடு அழைப்பு நிகழ்விற்காக, பெண்ணின் வீட்டிற்கு தம்பதியினர் இருவரும் வந்துள்ளனர்.

பின்னர், விருந்து முடித்துவிட்டு, காரில் ஸ்டீபன் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது, ரெஸ்பாகா திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. “விருப்பம் இல்லாமல் பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டார்களா? அல்லது அந்த பெண் வேறு யாரேனையும் காதலித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா” என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணமாகிய 3 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம், இருவீட்டாரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top