Connect with us

Raj News Tamil

வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்.. ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி..

தமிழகம்

வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்.. ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கௌரி நகர் பகுதியை சேர்ந்தவர் சுஜய். 30 வயதாகும் இவர், ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சுஷ்மா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், பிரசவத்திற்கு, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சுஜய் வீட்டில் இருந்து இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு, இளம்பெண் ஒருவர், ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சுஜய் வீட்டில் உயிரிழந்து கிடந்த இளம்பெண் சுப்புலட்சுமி என்பதும், அவர் ஒரு கல்லூரி மாணவி என்பது தெரியவந்துள்ளது.

எதற்காக இந்த கொலை நடந்தது என்றும், சுஜய்-க்கும் சுப்புலட்சுமிக்கும் என்று தொடர்பு என்பதும், அவர் கைது செய்யப்பட்ட பின்னரே தெரியவரும். தற்போது, தலைமறைவாக உள்ள சுஜயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top