தமிழகம்
கிரிக்கெட் விளையாடிய இளைஞர்.. திடீரென நடந்த சம்பவம்.. பதறிய நண்பர்கள்.. பரிதாப மரணம்..
சென்னை மாதவரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம். 30 வயதாகும் இவர், தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில், நண்பர்களுடன் சென்று, கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 1-ஆம் தேதி அன்றும், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீராம், திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login