Connect with us

Raj News Tamil

விளையாட சென்ற சிறுவன்.. காலிங் பெல் அழுத்தியபோது நடந்த கொடூரம்..

தமிழகம்

விளையாட சென்ற சிறுவன்.. காலிங் பெல் அழுத்தியபோது நடந்த கொடூரம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமந்தூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 14 வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், உறவினர் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளான். வீட்டிற்குள் செல்வதற்காக, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டுள்ளான்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலிங் பெல் அழுத்திய சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top