Connect with us

Raj News Tamil

வாணியம்பாடி அருகே 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி!

தமிழகம்

வாணியம்பாடி அருகே 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி!

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து வாணியாம்படி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

More in தமிழகம்

To Top