தமிழகம்
சமாதானம் செய்ய சென்ற கணவன்.. மாமனார் செய்த கொடூரம்.. மாமியார் வீட்டில் நடந்த கச்சேரி..
தேனி மாவட்டம் கண்ணாத்தாள் பகுதியை சேர்ந்தவர் கந்தன். 34 வயதாகும் இவருக்கு சூர்யகலா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையே, கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கணவனை பிரிந்து, தனது தாய் வீட்டிற்கு சூர்ய கலா சென்றுவிட்டார். இதனால், சமாதானம் பேசுவதற்கு, மாமியார் வீட்டிற்கு சென்ற கந்தனை, மனைவியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், அவரிடம் இருந்த பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவரை துரத்தியுள்ளனர். இதையடுத்து, கந்தன் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமாதானம் செய்ய வந்த கணவரை தாக்கிவிட்டு, பணம் நகையை மனைவியின் உறவினர்கள் பறித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login