Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு..34 பேர் பலி

உலகம்

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு..34 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால், அவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான் வெளியிட்ட அறிக்கையில் தங்களுக்கும், இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்ததுள்ளது.

More in உலகம்

To Top