தமிழகம்
குப்பை கொட்டுவதில் பிரச்சனை.. காவலரின் மனைவியை செருப்பால் அடித்த பெண்..
தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் தங்கதுரை. இவர், சென்னை சேத்துப்பட்டு பகுதியில், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
பக்கத்து வீட்டை சேர்ந்த பிரதீபா என்ற பெண், தன் வீட்டு குப்பைகளை, அடிக்கடி தங்கதுரை வீட்டின் முன்பு கொட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு வீட்டுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பிரதீபாவின் மகன், தனது ‘ஷூ’வை கழட்டி, அதற்குள் இருந்து மண்ணை, ஆயுதப்படை காவலர் வீட்டின் முன்பு கொட்டியுள்ளார்.
இதன்காரணமாக, இருவீட்டாருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், காவலரின் மனைவியை பிரதீபா செருப்பால் அடித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login