தமிழகம்
மின் இணைப்புடன் ஆதார் கட்டாயம்..! கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்..!
தமிழ்நாட்டில் சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. இதில் 5 அரை லட்சம் பயனாளர்கள் மட்டுமே ஆதாரை இணைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆதாரை கட்டாயாம் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான குறுஞ்செய்தி நுகர்வோர்களின் போனுக்க அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆதாரை இணைத்துப் பின்னர் சரிபார்த்த பிறகே, ஆன்லைன் மற்றும் நேரடியாக மின் கட்டணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆதாரை இணைக்காதவர்களுக்கு கூடுதல் 2-நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login