சினிமா
“அவருக்காக காத்திருக்கிறேன்” – மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகை சோனியா அகர்வால்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவருக்கும், இயக்குநர் செல்வராகவனுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு, டிசம்பர் 15-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.
4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இருவரும், கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த 2010-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு, இயக்குநர் செல்வராகவன் அஞ்சலி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துக் கொண்டார். இதேபோல், சோனியா அகர்வாலும் 2-வது திருமணம் செய்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை அவர் 2-வது திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள சோனியா அகர்வால், நான் எத்தனை நாள் திருமணம் செய்யாமலே இருப்பேன் என்பது தெரியவில்லை. சரியான ஆள் வரும்போது அது நடக்கலாம்.. அவருக்காக தான் நானும் காத்திருக்கிறேன். ஆனால், இப்போது வரை எனக்கான ஆளை நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login