சினிமா
பொது இடத்தில் அபிஷேக் பச்சனிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்? என்ன ஆச்சு!!!!
கிரிக்கெட் விளையாட்டில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவதை போல், கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. இந்த லீக்கில், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணி விளையாடி வருகிறது.
இந்த அணியை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும், அபிஷேக்கின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
அனைவரும் போட்டி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது, ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறினார். இதனைக் கேட்ட ஐஸ்வர்யா ராய், கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
You must be logged in to post a comment Login