Connect with us

Raj News Tamil

குடும்ப தகராறு.. மனைவி மற்றும் 2 வயது மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..

இந்தியா

குடும்ப தகராறு.. மனைவி மற்றும் 2 வயது மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் சர்மா. ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு, ருக்மீனா என்ற மனைவியும், 2 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் மகள், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்துவிட்டதாக, ராம்பிரசாத் சர்மா, காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரும், கழுத்தை நெரித்துக் கொள்ளப்பட்டிருப்பதும், பின் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனால், கணவன் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை பிடித்து, கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக, மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டேன் என்று ராம்பிரசாத் வாக்குமூலம் அளித்தார். இதனைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

குடும்பச்சண்டையில் மனைவி, மகளை கொன்று நாடகமாடியதும், ராணுவவீரர் கைது செய்யப்பட்டதும் ஜோத்பூரில் பெரும் பரபரப்பை, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top