தமிழகம்
மருந்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பஜார் வீதியில் ரங்கராஜன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நள்ளிரவில் ஹேல்மட் அனிந்து வந்த மர்நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது கடையின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் சத்தட்டமிட்டதால் கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.
இது குறித்து மருந்து கடையின் உரிமையாளர் ரங்கராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
You must be logged in to post a comment Login