தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை!
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் குடியிருப்பவர் தாமோதரன். சென்னையில் டிடெக்டிவ் செக்கியூரட்டி ஏஜென்சி நடத்திவரும் இவர் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.
இந்த நிலையில் தாமோதரன் வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அழைத்து செறுள்ளார். இன்று காலை அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தாமோதரனுக்கு தகவல் கொடுத்தனர்.
பீரோவில் இருந்த 11 சவரண் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.
You must be logged in to post a comment Login