அரசியல்
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
வந்தே பாரத் ரெயில்சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னைக்கு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை, திரவியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.
You must be logged in to post a comment Login