Connect with us

Raj News Tamil

“கண்ணீர் விட்டு கதறி அழுத தல தோனி” – காரணம் கேட்டு மெய் சிலிர்த்த ரசிகர்கள்!

விளையாட்டு

“கண்ணீர் விட்டு கதறி அழுத தல தோனி” – காரணம் கேட்டு மெய் சிலிர்த்த ரசிகர்கள்!

2008-ஆம் ஆண்டு தான் முதன்முதலில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டன. அந்த நாள் முதல் இன்று வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, தோனி தான் தலைமை தாங்கி வருகிறார்.

சென்னை அணியின் மீதும், சென்னை ரசிகர்கள் மீதும் தீராத அன்புக் கொண்ட தோனி, இதுவரை 10 முறை இறுதிப் போட்டிக்கு, அணியை அழைத்து சென்றுள்ளாா. அதில், 4 முறை கோப்பையையும் வென்றுள்ளார். இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் உறுப்பினர் ஹர்பஜன் சிங், தோனி குறித்து, நெகிழ்ச்சியான தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதாவது, “ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதற்கு 2 ஆண்டுகள், சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை முடிந்த பிறகு, 2018-ஆம் ஆண்டு, சென்னை அணி மீண்டும் விளையாட வந்தது.

அன்றைய தினம் இரவு, அணியின் வீரர்களுக்கு, விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று, தோனி கண்ணீர் விட்டப்படி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சிவப்பட்டிருந்தார்” என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

இதையடுத்து பேசிய இம்ரான் தாஹிர், “தோனிக்கு அது உணர்ச்சிகரமான தருனம்.. இந்த அணி, அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை, அப்போது தான் அறிந்தேன். அவர் தன் அணியை குடும்பமாக எண்ணுகிறார்” என்று தெரிவித்தார்.

2 ஆண்டு தடைக்கு பிறகு, தன் அணியில் இணைந்ததற்காக, தோனி கண்ணீர் விட்டு அழுதுள்ள தகவல், அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in விளையாட்டு

To Top