Connect with us

Raj News Tamil

“100 சதவீதம் இது உண்மை?” – பிராவோ சொன்ன தகவல்! சந்தோஷத்தில் குதிக்கும் தோனி ரசிகர்கள்!

விளையாட்டு

“100 சதவீதம் இது உண்மை?” – பிராவோ சொன்ன தகவல்! சந்தோஷத்தில் குதிக்கும் தோனி ரசிகர்கள்!

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்து, இன்று வரை, சென்னை அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இதுவரை 10 முறை பைனலுக்கு சென்னை அணியை அழைத்து சென்றுள்ள தோனி, அடுத்த ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால், அவரை வரவேற்க, சென்னை அணியின் ஆட்டங்கள் எந்த மைதானத்தில் நடந்தாலும், சி.எஸ்.கே-வின் கொடிகள் தான் அதிகம் தென்படுகின்றன. எனவே, இதுதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் தொடர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது, 2024-ஆம் ஆண்டின் ஐ.பி.எல். தொடரில், 100 சதவீதம் தோனி விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். ”“ரகானேவும், சிவம் தூபேவும், அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதால், தோனி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டிய தேவை இருப்பதில்லை.

ஆனால், கடினமாக சூழ்நிலைகளில், தோனி எடுக்க வேண்டிய முடிவுகள், சி.எஸ்.கே. அணிக்கு தேவையாக உள்ளது. அது தோனிக்கு மட்டுமே தெரியும்” என்று பிராவே தெரிவித்துள்ளார். 100 சதவீதம் தோனி விளையாட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in விளையாட்டு

To Top