Connect with us

Raj News Tamil

கார்த்தி 25-வது பட நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை – அமீர்

சினிமா

கார்த்தி 25-வது பட நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை – அமீர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக். இவரது 25-வது படமான ஜப்பான் விரைவில், திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், 25-வது படம் என்ற மைல்கல்லை எட்டியதற்காக, பிரம்மாண்ட விழா, ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில், கார்த்தியின் 25 படங்களிலும் பணியாற்றிய பல்வேறு கலைஞர்கள், கலந்துக் கொண்டனர்.

ஆனால், கர்த்தியை பருத்தி வீரன் படத்தில் அறிமுகப்படுத்திய அமீர், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து பேசிய அமீர், “என்னை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கவில்லை. அதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் விதைத்த விதை, மரமாக வளர்ந்திருப்பதில், எனக்கு மகிழ்ச்சி தான்” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top