Connect with us

Raj News Tamil

விஜய்சேதுபதியுடன் படம் பண்ண முடியாது – சேரன் கோபம்

சினிமா

விஜய்சேதுபதியுடன் படம் பண்ண முடியாது – சேரன் கோபம்

ஒரு காலத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் சேரன். ஆட்டோகிராஃப், வெற்றி கொடி கட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது மார்கெட் இல்லாமல், தவித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் விஜய்சேதுபதியை வைத்து, சேரன் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக, சில வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,இயக்குநர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள வந்திருந்தார். அப்போது, அங்கு வந்த செய்தியாளர்கள், விஜய்சேதுபதி படம் தொடர்பான அப்டேட் குறித்து கேட்டனர்.

அதற்கு காட்டமாக பதில் அளித்த அவர், “இனிமே அந்த படம் பண்ண முடியாது . நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும்.” என்று தெரிவித்தார்.

More in சினிமா

To Top