Connect with us

கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டுவேன்..டி.ஆர்.பாலுவின் பேச்சால் பரபரப்பு

அரசியல்

கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டுவேன்..டி.ஆர்.பாலுவின் பேச்சால் பரபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் தாம் வெட்டுவேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் பேசுகையில் கீ.விரமணியால் திருப்பி அடிக்க முடியாது, ஏனென்றால் அவரிடம் பலம் இல்லை. என்னிடம் பலம் இருக்கிறது, அதனால் நிச்சயம் திருப்பி அடிப்பேன் என டி.ஆர்.பாலு பேசினார்.

சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதுதான் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருந்து வரும் முதல்வருக்கு டி.ஆர்.பாலு பேச்சு மேலும் ஒரு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top