Connect with us

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் புதிய காரை எரித்த மர்ம நபர்கள்

அரசியல்

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் புதிய காரை எரித்த மர்ம நபர்கள்

சென்னை வண்டலூர் அடுத்த ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் தமிழமுதன். இவர் திமுக நிர்வாகியகவும், தனியார் மேன்பவர் நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

இவர் நடத்திவரும் தொழில் நிறுவனத்திற்கு நேற்று முன்று புத்தம் புதிய வெள்ளை நிர பொலேரோ (Bolero)கார்களை வாங்கியுள்ளார். அதனை அவரது வீட்டின் அருகாமையில் உள்ள காலி மைதானத்தில் நேற்று நிறுத்தி வைத்துள்ளார்.

இந் நிலையில் திடிரென அதில் ஒரு கார் பின் பகுதியில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் மூன்றில் ஒரு கார் எரிந்து நாசமானது. மற்ற இரண்டு கார்களும் வெப்பத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top