அரசியல்
பெண் காவலரிடம் அத்துமீறல் : திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைது
கடந்த 31-ம் தேதி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 129-வது வட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமம் சரோஜினி பாய் தெருவை சேர்ந்த பிரவீன்(23) மற்றும் சின்மயா நகர், அண்ணா தெருவை சேர்ந்த ஏகாம்பரம்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login