Connect with us

Raj News Tamil

பயிர் காப்பீடு கால வரம்பு நீட்டிப்பு..! மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்..!

அரசியல்

பயிர் காப்பீடு கால வரம்பு நீட்டிப்பு..! மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் நீர்நிலைகளில் வெள்ளநீர் நிரம்பி, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதில் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை எனத் தொடர் விடுமுறை காரணமாக பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனம் போன்ற சேவை நிறுவனங்களில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பயிர்க் காப்பீடு கால வரம்பை நீட்டிக்குமாறு அவர் தனது கடிதத்தில் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top