Connect with us

Raj News Tamil

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது? அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சினிமா

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது? அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் செல்வராகவன். இவரது திரைப்படங்கள், வெளியான சமயத்தை விட, 10 வருடங்கள் கழித்து தான் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன. அவ்வாறு கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தான் ஆயிரத்தில் ஒருவன்.

சோழர் கால வரலாற்றை புனைவு கொண்டு, வித்தியாசமாக சொன்ன இந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், ஆண்டுகள் பல கடந்த பிறகு, ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினர். இந்த எதிர்பார்ப்பை பயன்படுத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை எடுத்து வெற்றி பெறலாம் என்று செல்வராகவன் முடிவு செய்தார்.

அதற்கான அறிவிப்புகளும், சமீபத்தில் வெளியாகின. ஆனால், அறிவிப்பு வெளியானதோடு சரி, அதன்பின், படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதாவது, “ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தில் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அது விரைவில் நடந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன்.

மேலும், அந்த படத்தின் கதையை, செல்வராகவன் எப்போது சொல்வார் என்றும் ஆவலாக உள்ளேன். படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று அந்த போட்டியில் அவர் தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top