இந்தியா
சொத்து தகராறு.. மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்..
கர்நாடகாவில், சொத்து தகராறில் மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவனை, காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபா பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருக்கும், சவிதா என்ற பெண்ணுக்கும், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும், குடும்ப சொத்து காரணமாக, இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சவிதாவின் வீட்டிற்கு நேற்று சீனிவாஸ் சென்றுள்ளார்.
அப்போது, தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சீனிவாசனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login