Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இந்தியா: 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

விளையாட்டு

பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இந்தியா: 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிக்க தொடங்கினர்.

இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர். மழை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் திங்கட்கிழமை (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மழை நின்ற பிறகு மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த சதத்தின் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது.

விராட் கோஹ்லி 122 ஓட்டங்களும் கே.எல்.ராகுல் 111 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ஓட்டங்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் 10 ஓட்டங்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபகர் ஜமான் குல்தீப் யாதவ் வேகத்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் காரணமாக இஃப்திகார் அஹ்மத் – சல்மான் கூட்டணி நிதானமாக ஆடியது. இருப்பினும் இந்திய பந்துவீச்சை எதிகொள்ள திணறிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 228 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிக்க தொடங்கினர்.

இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின் கள நடுவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தபோது மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அப்போது விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தனர். மழை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் திங்கட்கிழமை (ரிசர்வ் டே) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மழை நின்ற பிறகு மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த சதத்தின் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது.

விராட் கோஹ்லி 122 ஓட்டங்களும் கே.எல்.ராகுல் 111 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ஓட்டங்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் 10 ஓட்டங்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபகர் ஜமான் குல்தீப் யாதவ் வேகத்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் காரணமாக இஃப்திகார் அஹ்மத் – சல்மான் கூட்டணி நிதானமாக ஆடியது. இருப்பினும் இந்திய பந்துவீச்சை எதிகொள்ள திணறிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 228 ரன்களில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

More in விளையாட்டு

To Top