அரசியல்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்..!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 3 நாட்களுக்கு பிரசாரம் செய்ய உள்ளார்.
வரும் 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகள் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login