Connect with us

Raj News Tamil

6 வயது மகளை கோடாறியால் வெட்டிக் கொன்ற தந்தை! துபாயில் இருந்து வந்ததும் செய்த கொடூரம்!

இந்தியா

6 வயது மகளை கோடாறியால் வெட்டிக் கொன்ற தந்தை! துபாயில் இருந்து வந்ததும் செய்த கொடூரம்!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மகேஷ். 38 வயதாகும் இவருக்கு, வித்யா என்ற மனைவியும், நக்ஷத்ரா என்ற 6 வயது மகளும் இருந்தனர். ஸ்ரீ மகேஷ் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, அவரது மனைவி வித்யா, இறந்துவிட்டார்.

இதனால், ஸ்ரீ மகேஷின் தாய் தான், நக்ஷத்ராவை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் துபாயில் இருந்து வந்திருந்த ஸ்ரீ மகேஷ், நேற்று முன்தினம், தனது மகளுடன், வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென வீட்டில் இருந்த கோடாறியை எடுத்து, தனது 6-வயது மகளை வெட்டி கொலை செய்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்கு வந்த தனது தாயையும், ஸ்ரீ மகேஷ் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பித்த அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், ஸ்ரீமகேஷை கைது செய்தனர். மேலும், எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் விவாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top