இந்தியா
தடுமாறி கீழே விழுந்த முதியவர்.. வேகமாக வந்த பேருந்து.. இறுதியில் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்..
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து மாவூர் செல்லும் சாலையில் செருவாடி எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை வழியாக முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென நிலைத்தடுமாறி, சாலையின் நடுவே கீழே விழுந்தார். இந்த நேரத்தில், அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர், கீழே கிடந்த முதியவரை பார்த்து, சாதுர்யமாக பேருந்தை நிறுத்தினார். இதனால், அந்த முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்த வீடியோவில் இருந்த இன்னொரு விஷயமும், நெட்டிசன்களால் கவனிக்கப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த சம்பவம் நடந்தபோது, அனைவரும் அந்த முதியவரை தூக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பைக்கை ரோட்டிலேயே அப்படியே நிறுத்தி விட்டு, சாலையின் மறுபுறம் ஓடி சென்றார். இவர் எதற்காக அப்படி செய்தார்? ஏன் உதவி செய்யவில்லை என்று பல்வேறு கேள்விகளும் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
You must be logged in to post a comment Login