Connect with us

Raj News Tamil

ஒரு வருடத்திற்கு பிறகு ஒடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படம்!

சினிமா

ஒரு வருடத்திற்கு பிறகு ஒடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படம்!

பொதுவாக திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்தில், ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகிவிடும். ஒரு சில பிரம்மாண்டமான திரைப்படங்களும், 3 மாதங்களுக்குள் ரிலீஸ் செய்துவிடுவார்கள்.

ஆனால், ஒரு தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ஒரு வருடங்களுக்கு பிறகு, ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதாவது, கிஷோர் இயக்கத்தில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி ஆகியோர் நடிப்பில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான திரைப்படம் மாயோன்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தெலுங்கு மொழியிலும் வெளியாகி, அங்கும் சக்கை போடு போட்டது.

இந்த படத்தை திரையரங்குகளில் காண முடியாத ரசிகர்கள், ஓடிடியில் வெளியான பிறகாவது, பார்க்கலாம் என்று காத்திருந்தனர். ஆனால், ஒரு வருடம் ஆகியும் வெளியாகவே இல்லை.

இந்நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இந்த திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில், நாளை வெளியாக உள்ளதாம்.

More in சினிமா

To Top