Connect with us

Raj News Tamil

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்ற தாய்!

தமிழகம்

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்ற தாய்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு அன்றும், இருவருக்கும் இடையே, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரவு 10 மணிக்கு, உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, சின்னராசு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சூர்யா, தனது 2 மகன்களையும், கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், கிணற்றில் கிடந்த 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top