சினிமா
ஒய் திஸ் கொலவெறி போல தான் நாட்டு நாட்டு பாடல் – புகழ்ந்த கீரவாணி
ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆா். உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்தது.
இதுமட்டுமின்றி, பல்வேறு விருதுகளையும் வென்ற இந்த திரைப்படம், சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதுகுறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “தனுஷின் வெய் திஸ் கொல வெறி பாடல், மிக எளிமையாகவும், சிறப்பாகவும் உருவானது. அதேபோல் தான், நாட்டு நாட்டு பாடல், மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.” என்று இரண்டு பாடலையும் ஒப்பிட்டு அவர் பேசியிருக்கிறார்.
You must be logged in to post a comment Login