Connect with us

Raj News Tamil

வீட்டிற்குள்ளேயே நகையை வைத்துவிட்டு போலீசாரை அலையவிட்ட தம்பதி!

தமிழகம்

வீட்டிற்குள்ளேயே நகையை வைத்துவிட்டு போலீசாரை அலையவிட்ட தம்பதி!

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன், தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் இருந்த 130 சவரன் நகைகள் கொள்ளையடித்துவிட்டதாக, தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அதன்பிறகே, அந்த நகை திருடப்படவில்லை என்பதும், பீரோவில் சரியாக பார்க்காமல், நகை திருடப்பட்டதாக, தம்பதியினர் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த தம்பதிக்கு அறிவுரை கூறிவிட்டு, அங்கிருந்து காவல்துறையினர் கிளம்பி சென்றனர். காலை முதலே பலரையும் பதற்றத்தில் ஆழ்த்திய தம்பதி வீட்டுக்குள்ளேயே நகையை வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top