Connect with us

Raj News Tamil

ஆருத்ரா  மோசடி  வழக்கில் ஆர்.கே .சுரேஷ் !

சினிமா

ஆருத்ரா  மோசடி  வழக்கில் ஆர்.கே .சுரேஷ் !

சென்னையை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா  நிதி  நிறுவனமானது பண  மோசடியில்  ஈடுபட்டுள்ளது . இதன் கிளைகள்  தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறதையடுத்து ,மோசடியின்  காரணமாக  16  பேர் மீது  பொருளாதார குற்றப்பறிவு  போலீசார்  வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக  ,11 பேர்  கைது செய்யப்ட்டுள்ளனர்  5 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.இதில்  நடிகரும்  தயாரிப்பாளருமான ஆர்.கே .சுரேஷ்  மீதும் குற்றம் சாட்டப்பட்டது.இதனை ஆய்வு செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜென்ட்  ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ,போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், கடந்த 5 மாத காலமாக ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில்  தலைமறைவாக  இருப்பதாக  தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top