Connect with us

Raj News Tamil

லோடு வாகனம் மோதி விபத்து – 2 பேர் பரிதாப பலி..

தமிழகம்

லோடு வாகனம் மோதி விபத்து – 2 பேர் பரிதாப பலி..

ஓசூர் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது, லோடு வாகனம் மோதியதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி துர்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோதியப்பா. இவர், தனது நண்பர் நாராயணப்பாவுடன், நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

கெலமங்கலம் சாலை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஜோதியப்பாவும், அவரது நண்பரும், பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள லோடு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top