சினிமா
விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – ஏன் தெரியுமா?
கடந்த 2015ம் ஆண்டு அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் தனது யதார்த்தமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து தியா, மாரி 2, NGK படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்ற அவர் தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றார். குறுகிய காலத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக மாறியவர் சாய் பல்லவி.
இந்நிலையில் விஜய், அஜித் கூட்டணியில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவி மறுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிக்க சாய் பல்லவியை அணுகியுள்ளனர். ஆனால் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டார்.
முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும், முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று சாய் பல்லவி எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
You must be logged in to post a comment Login