Connect with us

Raj News Tamil

கே.ஜி.எஃப் இயக்குநர் எடுத்த முடிவால் நிம்மதி அடைந்த அட்லீ?

சினிமா

கே.ஜி.எஃப் இயக்குநர் எடுத்த முடிவால் நிம்மதி அடைந்த அட்லீ?

கே.ஜி.எப் 1, 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து, சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், பின்னணி பணிகள் தாமதம் ஆவதால், படத்தின் வெளியீட்டை, டிசம்பர் மாதம் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல், ஜவான் படக்குழுவினருக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதாவது, ஜவான் திரைப்படம் வரும் 7-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படம் நன்றாக இருந்தால், செப்டம்பர் மாதம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே செப்டம்பர் மாதம் சலார் திரைப்படம் வெளியாகும் என்று முன்பு கூறியிருந்ததால், ஜவான் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் நினைத்திருந்தனர். தற்போது, சலார் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், ஜவானுக்கு இருந்து பிரச்சனை நீங்கியுள்ளது.

More in சினிமா

To Top