சினிமா
ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் வதந்தியை முடித்துவைத்த செல்வராகவன்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தனியாக தான் வந்தோம்.. தனியாக தான் போவோம்.. துணை என்பது கானல் நீர் போல.. நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், செல்வராகவனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு விரைவில் விவாகரத்து ஆக உள்ளதாகவும் கூறி வந்தனர்.
ஆனால், தற்போது, தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த வதந்திக்கு, செல்வராகவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
You must be logged in to post a comment Login