Connect with us

Raj News Tamil

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம்! திருந்துவாரா சிம்பு?

சினிமா

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம்! திருந்துவாரா சிம்பு?

நன்றாக நடிக்கும் திறமை இருந்தாலும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

அப்படியான நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்பு, சில வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து, சினிமா ஷீட்டிங்கிற்கு சரியாக வந்து, மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இனிமேல் இப்படியே ஒழுக்கமாக இருந்தால், மார்கெட்டின் உச்சிக்கே இவர் சென்றுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிம்பு கமிட்டானார். பின்னணி பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று காத்திருந்தனர்.

ஆனால், படப்பிடிப்புக்கு தேதி ஒதுக்காமல், நடிகர் சிம்பு வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகிறாராம்.

இவர் வந்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர். இந்த தகவல், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top